Header Ads

தாமதமாகும் ‘அண்ணாத்த’…. இயக்குனர் சிவா எடுத்த அதிரடி முடிவு



 சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி உள்ளிட்ட பெரும் நட்சத்திரப் பட்டாளமே நடித்து வந்த படம் அண்ணாத்த. இப்படத்தின் படப்பிடிப்புகள் ஹைதராபாத்தில் நடைபெற்று வந்த நிலையில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

அதன்பின்னர், ரஜினிகாந்த் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு நுரையீரல் பாதிப்பால் மருத்துவ ஆலோசனைப் பெற்று சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் அரசியலில் தான் ஈடுபடப்போவதில்லை என்று கூறி தற்போது சென்னையிலுள்ள தனது வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார்.

அதனால் சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் அண்ணாத்த படப்பிடிப்பு மீண்டும் தாமதமாகும்
எனத் தெரிகிறது.

இந்நிலையில், இயக்குநர் சிவா அடுத்து சூர்யாவின் நடிப்பில் உருவாகவுள்ள படத்திற்கான பணிகளில் ஈடுபட்டுவருகிறார்.

மேலும் அண்ணாத்த படத்தின் இறுதிகப்பட்ட படப்பிடிப்பை முடித்துக்கொடுத்துவிட்டு, பின்னர் சூர்யா படத்திற்கான வேலைகளை அவர் தொடங்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகிறது.

இதனால் சூர்யா ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

No comments

Powered by Blogger.