Header Ads

ரூ.25 கோடி நஷ்ட ஈடு: ‘மாஸ்டர்’ தயாரிப்பாளர் அனுப்பிய நோட்டீஸால் பரபரப்பு!

 


தளபதி விஜய் நடித்த ‘மாஸ்டர்’ படத்தின் இணை தயாரிப்பாளர் லலித்குமார் அவர்கள் ரூபாய் 25 கோடி கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

தளபதி விஜய் நடித்த ‘மாஸ்டர்’ திரைப்படம் கடந்த 13ஆம் தேதி தமிழகம் உள்பட உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகி மிகப்பெரிய வசூல் சாதனையை செய்து வருகிறது என்பது தெரிந்ததே

இந்த நிலையில் ‘மாஸ்டர்’ திரைப்படம் வெளியாவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் அதாவது ஜனவரி 11ஆம் தேதியே சில காட்சிகள் இணையத்தில் லீக் ஆனது. இதனை அடுத்து இந்த படத்தின் குழுவினர் அதிரடியாக நடவடிக்கை எடுத்ததில், இந்த படத்திற்காக டிஜிட்டல் பணிபுரிந்த நிறுவனம் ஒன்றின் ஊழியர் ஒருவர் தான் இந்த காட்சிகளை இணையத்தில் லீக் செய்தவர் என்பது கண்டுபிடிக்கப்பட்டது

இதனையடுத்து அந்த சம்பந்தப்பட்ட டிஜிட்டல் நிறுவனத்திற்கு ‘மாஸ்டர்’ படத்தின் இணை தயாரிப்பாளர் லலித்குமார் ரூபாய் 25 கோடி நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இந்த நோட்டீசுக்கு சம்பந்தப்பட்ட டிஜிட்டல் நிறுவனம் என்ன பதிலளிக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

No comments

Powered by Blogger.