Header Ads

முரட்டு வில்லனுக்கு குவியும் தமிழ் சினிமா வாய்ப்புகள்!

 


கேஜிஎப் படத்தின் முதல் பாகத்தில் கருடன் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்த நடிகருக்கு இப்போது தமிழ் சினிமாவில் அதிகளவில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

2018 ஆம் ஆண்டு கேஜிஎப் படத்தின் முதல்பாகம் ரிலீஸாகி இந்தியா முழுவதும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. அந்த படத்தின் நாயகன் யாஷ் மட்டும் இல்லாமல் வில்லனாக நடித்த நடிகர்களுக்கும் ரசிகர்க உருவானார்கள். முதல் பாகத்தில் கொடூர வில்லனாக கருடன் கதாபாத்திரத்தில் நடித்தவர் ராமச்சந்திர ராஜு.

இவரின் நடிப்பால் தமிழ் ரசிகர்கள் கவரப்பட்டதை போலவே தமிழ் இயக்குனர்களும் கவரப்பட்டுள்ளார்கள். அதையடுத்து இப்போது கார்த்தி நடித்துள்ள சுல்தான், ஜெயம் ரவி, விஜய் ஆண்டனி ஆகியோர் நடிக்கும் படங்களில் எல்லாம் நடித்துள்ளார். வரிசையாக தமிழ் சினிமாக்களில் நடிக்க வாய்ப்பு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.