Header Ads

சிம்பு படத்தில் வில்லனாகும் சூப்பர்ஹிட் பட இயக்குனர்!



 நடிகர் சிம்பு நடித்த ’ஈஸ்வரன்’ திரைப்படம் கடந்த பொங்கல் தினத்தில் வெளியான நிலையில் சிம்பு தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகிவரும் ’மாநாடு’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சமீபத்தில் நடிகர் சிம்பு ’பத்து தல’ என்ற திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார் என்பதும் இந்த படத்தை கிருஷ்ணா என்பவர் இயக்க உள்ளார் என்பதும் இந்த படத்திற்கு ஆஸ்கார் நாயகன் ஏஆர் ரகுமான் அவர்கள் இசையமைக்க உள்ளார் என்றும் செய்திகள் வெளியானது

மேலும் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் கௌதம் கார்த்திக் மற்றும் பிரியா பவானிசங்கர் ஆகியோரும் நடிக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின்படி இந்த படத்தின் வில்லன் கேரக்டரில் பிரபல இயக்குனர் கௌதம் மேனன் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

சிம்பு நடிப்பில் உருவான ’விண்ணைத்தாண்டி வருவாயா’, ‘அச்சம் என்பது மடமையடா’ ஆகிய படங்களையும், கமல், அஜித் உள்பட பல பிரபலங்கள் நடித்த சூப்பர் ஹிட் படங்களையும் இயக்கிய கௌதம் மேனன், சிம்பு படத்தில் வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

No comments

Powered by Blogger.