Header Ads

பொன்னியின் செல்வன் படப்பிடிப்பில் உலக அழகி…

 


இந்தியாவில் இருந்து பல உலக அழகிகள் தேர்ந்தெடுக்கப் பட்டாலும் இந்திய ரசிகர்ளை பொறுத்த வரையில் உலக அழகி என்றால் அது ஒரு முகம்தான், அவர்தான் ஐஸ்வர்யா ராய் பச்சன். இவர் தற்போது இயக்குநர் மணிரத்னம் இயக்கி வரும் வரலாற்றுத் திரைப்படமான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதற்கான படப்பிடிப்பில் கலந்து கொண்ட ஐஸ்வர்யா ராயுடன் நடிகை அருஷிமா வர்ஷினி எடுத்துக் கொண்ட செல்பி புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் படு வைரலாகி இருக்கிறது

கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் அடிப்படையில் ஒரு வரலாற்று நாவல். தமிழ் வாசகர்களை மிகவும் ஈர்த்த இந்த நாவலில் சோழ வம்சத்தை பற்றியும் அதன் பராக்கிரமங்களையும் காட்சி படுத்தி இருப்பார். அதிலும் இராஜ இராஜ சோழன், வந்தியத் தேவன், நந்தினி போன்ற சில கதாபாத்திரங்களை நினைத்து உருகாத தமிழ் வாசகர்களே இருக்க முடியாது. அத்தகைய பிரம்மாண்டத்தை இயக்குநர் மணிரத்னம் திரைப்படமாக எடுத்து வருகிறார். இதனால் ரசிர்கள் மத்தியில் இத்திரைப்படத்திற்கான எதிர்ப்பார்ப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இத்திரைப்படத்தில் நடிகர் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஜெயராம், ஐஸ்வர்யா ராய் பச்சன், த்ரிஷா மற்றும் பிரபு, விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா லஷ்மி போன்றோர் நடித்து வருவதாக முன்னரே படக்குழு அறிவித்து இருந்தது. மேலும் இந்தத் திரைப்படத்தில் நடிகை அருஷிமா வர்ஷ்னியும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவர் நடிகை ஐஸ்வர்யா ராயுடன் எடுத்துக் கொண்ட செல்பி புகைப்படம் சமூக வலைத்தளத்தில் படு வைரலாகி இருக்கிறது.


No comments

Powered by Blogger.